பதிவு செய்த நாள்
02 மார்2012
00:08
சென்னை: லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.) நிறுவனம், "ஜீவன் விருத்தி' என்ற புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இப்புதிய காப்பீட்டு திட்டம் பங்குச் சந்தை சாராத திட்டமாகும். இத்திட்டத்தின்படி, ஒரு முறை பிரிமியம் செலுத்தினால் போதுமானது. காப்பீடு செய்தவர் இறக்க நேரிடின், செலுத்திய பிரிமியத்தை போல 5 மடங்கு தொகையை காப்பீடாக பெறலாம்.இத்திட்டத்தின் முதிர்வு காலம் 10 ஆண்டுகளாகும். முதிர்வு காலத்தின் போது, உத்திரவாதம் அளிக்கப்பட்ட காப்பீட்டு தொகையுடன், விசுவாச தொகையையும் பெறலாம். மேலும், ஒரு வருடத்திற்கு பின், காப்பீட்டுதாரருக்கு கடன் வசதியும் அளிக்கப்படும். 8 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இப்புதிய திட்டத்தில் சேரலாம்.காப்பீட்டுதாரர், 80சி பிரிவின் படி வருமான வரி விலக்கும் பெறலாம். காலவரையறையுடன் கூடிய இப்புதிய காப்பீட்டு திட்டத்தில், நான்கு மாதங்களுக்குள் சேரலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|