பதிவு செய்த நாள்
02 மார்2012
15:01
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதுடில்லியில், ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.2,039.24 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.64,596.36 என்ற அளவில் உள்ளது. இது, மும்பையிலும் ரூ.63,499லிருந்து ரூ.65,636.74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை விகிதங்கள் விமானச் சேவை நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினத்தில் விமான எரிபொருளுக்கான செலவு 40 சதவீதமாக உள்ளது. தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப விமான எரிபொருள் விலையை 15 தினங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கின்றன. இதற்கு முன் எரிபொருள் விலை பிப்ரவரி மாதம் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரண்டு முறை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|