பதிவு செய்த நாள்
07 மார்2012
00:06
-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-நடப்பு காலண்டர் ஆண்டில், அமைப்பு சார்ந்த துறைகள், 16 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று, தனியார் ஆய்வு நிறுவனமொன்று மதிப்பீடு செய்துள்ளது. சென்ற 2011ம் ஆண்டில், 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளனசர்வதேச அளவில், பொருளாதார மந்த நிலை காணப்பட்டாலும், பல நிறுவனங்கள் அவற்றின், வளர்ச்சியை தக்க வைத்து கொள்ளும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதையடுத்து, இந்நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என தெரிகிறது.நடப்பாண்டில், மருத்துவமனை, விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த துறை, இயந்திரம் சாராத தயாரிப்பு துறை, ஊடகவியல் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அதிகளவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் என்ற கருத்து நிலவுகிறது.இதையடுத்து, அமைப்புச் சார்ந்த துறைகளில், முந்தைய ஆண்டை விட நடப்பாண்டில், கூடுதலாக, இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதில், மருத்துவத் துறையில், 2 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விருந்தோம்பல் துறையில், 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த துறையில், 2 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின், எட்டு முக்கிய நகரங்களில், 13 துறைகளை உள்ளடக்கிய, 639 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இத் தகவல் தெரிய வந்துள்ளதாக, தனியார் ஆய்வு நிறுவனமான மாபாய் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|