இந்திய தொழிலக கூட்டமைப்பின்தமிழக பிரிவிற்கு புதிய தலைவர்  இந்திய தொழிலக கூட்டமைப்பின்தமிழக பிரிவிற்கு புதிய தலைவர் ... நட்சத்திர விடுதிகளுக்கு வரி அதிகரிப்பு: இன்று முதல் அமல் நட்சத்திர விடுதிகளுக்கு வரி அதிகரிப்பு: இன்று முதல் அமல் ...
நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில்...நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2012
00:08

புதுடில்லி: சர்வதேச அளவில் தேவை குறைந்ததால், நாட்டின் ஏற்றுமதி, சென்ற பிப்ரவரியில், 4.3 சதவீதம் என்ற அளவில் குறைந்த வளர்ச்சி கண்டு, 2,460 கோடி டாலராக (1 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில், மின்னணு, ஜவுளி மற்றும் பொறியியல் பொருட்களுக்கான தேவை மிகவும் குறைந்து போயுள்ளது. இதையடுத்து, சென்ற பிப்ரவரியில், நாட்டின் ஏற்றுமதியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தக பற்றாக்குறைஅதேசமயம், இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 20.6 சதவீதம் அதிகரித்து, 3,980 கோடி டாலராக, (1 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரிக்கும் போது, வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது. சென்ற பிப்ரவரியில், ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,520 கோடி டாலராக (76 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, சென்ற ஜனவரியில், 1,470 கோடி டாலராக (73 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு மாதங்களாக, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை மிகவும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், பிப்ரவரியில் ஏற்றுமதி வளர்ச்சி மிகவும் மந்தமடைந்துள்ளது. ஜனவரியில்,ஏற்றுமதி 2,540 கோடி டாலராக (1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.எனினும், ஜனவரியை காட்டிலும் (4,10 கோடி டாலர் -2 லட்சத்து 500 கோடி ரூபாய்), சென்ற பிப்ரவரியில் நாட்டின் இறக்குமதி குறைந்துள்ளது.வளர்ச்சிசென்ற ஜனவரியில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில், முறையே 3.87 சதவீதம் மற்றும் 6.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி 21.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 26 ஆயிரத்து 740 கோடி டாலராக (13 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இதில், பொறியியல் (5,450 கோடி டாலர் - 20.9 சதவீத வளர்ச்சி), பெட்ரோலிய பொருட்கள் (5,300 கோடி டாலர் - 46 சதவீத வளர்ச்சி), நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (4,060 கோடி டாலர் -28.8 சதவீத வளர்ச்சி), ஆயத்த ஆடைகள் (1,210 கோடி டாலர்-19 சதவீத வளர்ச்சி), மருந்துகள் (1,140 கோடி டாலர்-21.4 சதவீத வளர்ச்சி) ஆகிய துறைகளின் ஏற்றுமதி உள்ளது.ஐரோப்பிய நாடுகள்மேலும், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி, 3.5 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டு, 800 கோடி டாலராக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில், இப்பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதையடுத்து, இதன் ஏற்றுமதி குறைந்துள்ளது. நாட்டின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், இந்நாடுகளின் பங்களிப்பு 60-70 சதவீதமாக உள்ளது.இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி 29.4 சதவீதம் அதிகரித்து, 43 ஆயிரத்து 420 கோடி டாலராக ( 21 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 16 ஆயிரத்து 680 கோடி டாலராக (8 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு அதிகரித்துள்ளது.மொத்த இறக்குமதியில், எண்ணெய் (13 ஆயிரத்து 260 கோடி டாலர்), தங்கம் மற்றும் வெள்ளி (5,500 கோடி டாலர்), இயந்திரங்கள் (3,220 கோடி டாலர்) மற்றும் மின்னணு பொருட்கள் (3,010 கோடி டாலர்) ஆகியவற்றின் பங்கு அதிகமாக உள்ளது.மதிப்பீட்டுக் காலத்தில், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, நிலக்கரி, உரம் மற்றும் தாவர எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்ந்ததையடுத்து, நாட்டின் இறக்குமதி அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு, 70-75 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நடப்பாண்டில், 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், உள்நாட்டில், இப்பொருட்களுக்கான தேவை உயர்ந்ததையடுத்து, இதன் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.ஏற்றுமதி இலக்குநடப்பு 2011-12ம் நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி டாலர் (15 லட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் ஏற்றுமதி, 29,200-29,800 கோடி டாலர் அளவிற்குதான் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், நாட்டின் இறக்குமதியும், 47,000-47,500 கோடி டாலர் அளவிற்கு உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை முன் எப்போதும் இல்லாத அளவாக, 17,500-18,000 கோடி டாலராக இருக்கும். இது, முந்தைய மதிப்பீட்டில், 15,500-16,000 கோடி டாலராக இருக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது என, ராகுல் குல்லார் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த நான்கு மாதங்களாக, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 3.6 சதவீத அளவிற்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)