சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ... ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு ...
ஸ்பீடு போஸ்ட், மணி ஆர்டர் கட்டணம் விரைவில் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2012
09:57

புதுடில்லி : விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்), மணி ஆர்டர் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், அஞ்சல் அட்டை மற்றும் இன்லேண்ட் லெட்டர் விலையை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய தபால் துறையில், 2002ம் ஆண்டில், கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், அச்சிடும் செலவும், போக்குவரத்து செலவும் கடுமையான அதிகரித்துள்ளது. இருந்தும், 10 ஆண்டுகளாக எந்த கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை.அதனால், தபால் துறை கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2006-07ம் நிதியாண்டில், 1,249.52 கோடியாக இருந்த தபால் துறையின் நஷ்டம் 2009-10ம் நிதியாண்டில் 5,632.46 கோடியாக அதிகரித்துள்ளது.ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில், தபால் துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவு பெருமளவு அதிகரித்துள்ளதால், 2010-11, 2011-12ம் ஆண்டுகளில் நஷ்டம் அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், விரைவு அஞ்சல், மணி ஆர்டர் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், அஞ்சல் அட்டை மற்றும் இன்லேண்ட் லெட்டர் விலையை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தவும் தபால் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முன்மொழிவுகளையும், அரசுக்கு அனுப்பியுள்ளது. அப்படி கட்டண உயர்வு நிகழ்ந்தால், அது 10 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் கட்டண உயர்வாக இருக்கும்.இந்த கட்டண மற்றும் விலை உயர்வுகள் எல்லாம் ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு வரலாம். அப்படி வரும் போது, தபால் துறைக்கு கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். கட்டண உயர்வு மற்றும் விலை உயர்வு யோசனைக்கு ஏழு உறுப்பினர்களைக் கொண்ட, அஞ்சல் கமிஷனும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கமிஷனின் தலைவராக தபால் துறையின் செயலர் உள்ளார்.விரைவு அஞ்சலுக்கான கட்டண உயர்வை, தபால் துறையின் அமைச்சர் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே அமல்படுத்த முடியும். இதர சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனில், தபால் துறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)