வெளிநாடுகளில் மவுசு அதிகரிப்பு:தமிழகத்தில் மிளகு விலை உயர்வுவெளிநாடுகளில் மவுசு அதிகரிப்பு:தமிழகத்தில் மிளகு விலை உயர்வு ... இணையம் மூலம் 27,000 குடும்ப அட்டைகள் புதுப்பிப்பு இணையம் மூலம் 27,000 குடும்ப அட்டைகள் புதுப்பிப்பு ...
"சென்செக்ஸ்' 226 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2012
00:23

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய்கிழமையன்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்களால், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. மேலும், கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான, நிதி உதவி திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் கிடைத்ததையடுத்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

அன்னிய செலாவணி வர்த்தகத்தில், நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு உயர்ந்து, 49.83 ரூபாய் என்றளவில் உயர்ந்து காணப்பட்டது. இது, சென்ற திங்களன்று 49.96 ரூபாயாக இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, டாட்டா உள்ளிட்ட ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 225.95 புள்ளிகள் அதிகரித்து, 17,813.62 புள்ளிகளில் நிலைபெற்றது.

வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,842.92 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,680.23 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 69.95 புள்ளிகள் உயர்ந்து, 5,429.50 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,438.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,390.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)