பதிவு செய்த நாள்
15 மார்2012
00:01
கொச்சி: சென்ற பிப்ரவரி மாதத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 57 ஆயிரத்து 100 டன்னாகக் குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 57 ஆயிரத்து 600 டன்னாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 78 ஆயிரம் டன்னிலிருந்து, 80 ஆயிரத்து 500 டன்னாக அதிகரித்துள்ளது. இதன் இறக்குமதி, 8,458 டன்னில் இருந்து 22 ஆயிரத்து 924 டன்னாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 8 லட்சத்து 41 ஆயிரத்து 500 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 4 சதவீதம் (8 லட்சத்து 7 ஆயிரத்து 550 டன்) அதிகம்.நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 9.02 லட்சம் டன்னாகவும், பயன்பாடு, 9.66 லட்சம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|