பதிவு செய்த நாள்
16 மார்2012
09:38
திண்டுக்கல்:எலுமிச்சை வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட மலை பகுதிகளில் அதிகளவில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் விளையும் எலுமிச்சம்பழங்கள் அதிக புளிப்பு சுவையுடன், பல நாட்கள் வரை அழுகாமலும் இருக்கும் தன்மை கொண்டதால், அதிக கிராக்கி உள்ளது.
சிறுமலை எலுமிச்சை, வாழைப்பழங்களுக்கென பிரத்யேக சந்தை திண்டுக்கல்லில் உள்ளது. இங்கு இரண்டு மாதங்களுக்கு முன் 1300 காய் உள்ள சிப்பம் 4,500 முதல் 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வெயில் காலம் துவங்கிவிட்டதால், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர். ஆனால், தற்போது 2500 முதல் 3000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.
வியாபாரி கோவிந்தராஜ் கூறியதாவது: கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில், எலுமிச்சங்காய்களுக்கு கிராக்கி இருக்கும். மாவட்டத்தில் நாட்டுகாய் வரத்து அதிகரித்துள்ளதால், மலைக்காய்க்கு விலை கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர், என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|