பதிவு செய்த நாள்
20 மார்2012
01:28
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயில் இந்தியா நிறுவனம், கச்சா எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறது. இந்நிறுவனம், வரும் 2012-13ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் உற்பத்தியை, 40 லட்சம் டன்னாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் இயக்குனர் (துரப்பணம்) பி.என்.டெண்டுல்கர் கூறியதாவது: நிறுவனம், தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில், கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகிறது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 37 லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நடப்பு முழு நிதியாண்டில், நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி, 39 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2012-13ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் உற்பத்தியை, 40 லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|