பதிவு செய்த நாள்
20 மார்2012
01:33
புதுடில்லி : சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் சில்லரை விலை அடிப்படையிலான பணவீக்கம், 8.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் புரதச் சத்து சார்ந்த பொருட்களின் விலை அதிகரிப்பால் இப்பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், சில்லரை பணவீக்கம், சென்ற ஜனவரி மாதத்தில், 7.65 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற பிப்ரவரியில், ஆண்டுக் கணக்கில், காய்கறிகளின் விலை மட்டும் 4.73 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் விலை 10.62 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், பால் மற்றும் பால் பொருட்களின் விலை 15.76 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும், தானியங்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களின் விலை 2.40 சதவீதம் என்ற மிதமான அளவிலும் பருப்பு வகைகளின் விலை 4.17 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.
எண்ணெய் மற்றும் கொழுப்பு சார்ந்த பொருட்களின் விலை 12.76 சதவீதம் என்ற அளவில் மிகவும் உயர்ந்துள்ளது. மேலும், ஊறுகாய், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றின் விலையும் 8.68 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற பிப்ரவரியில், எரிபொருள், விளக்குகள், ஆடைகள், படுக்கைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றின் விலை இரட்டை இலக்க அளவில் அதிகரித்திருந்தது. மேலும், கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கான பணவீக்க விகிதம் முறையே 8.36 மற்றும் 9.45 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
சென்ற ஜனவரியில், கிராமம் மற்றும் நகரங்களுக்கான சில்லரை பணவீக்கம், முறையே மைனஸ் 7.28 சதவீதம் மற்றும் 8.25 சதவீதமாக மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|