பதிவு செய்த நாள்
20 மார்2012
12:52
மும்பை : மொபைல்போன் மூலம் கூடுதல் சேவைகளை அளித்து பல்வேறு விதமான வர்த்தகத்தை நடத்த, பிரபல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நம் நாட்டில் தற்போது 90 கோடி பேர், மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். வரும் 2015ல், இந்த எண்ணிக்கை 120 கோடியாக உயர உள்ளது. மொபைல் போன் பேசுவதற்கு மட்டும் என்றில்லாது, இன்டர்நெட் பயன்பாட்டிலும் அதிகமாக வளர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாது, ரயில், விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்வது, தெரியாத இடத்தை தெரிந்து கொள்வதற்குரிய வரைபடங்களை பயன்படுத்துவது போன்றவற்றிலும் முன்னோடியாகத் திகழ்கிறது.சென்னை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, புனே, ஆமதாபாத், ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் பேர் உள்ளனர்.
எனவே, மொபைல் போன் மூலம் மேலும் பல வசதிகளை செய்து கொடுத்து வர்த்தகத்தை நடத்த, பிலிப்கார்ட், வோடபோன், ஜிக்சி போன்ற நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., சேவையும் பெரும் பங்கு வகிக்கிறது. வங்கிக் கணக்கை சரிபார்த்துக் கொள்வது, பயிர்களின் விலை நிலவரம், உடல்நிலை குறித்த தகவலை அறிந்து கொள்ளுதல் போன்ற சேவையை விரிவுப்படுத்தவும், மொபைல் போன் மூலம் தேவையான திரைப்படத்தைப் பார்க்கவும் வசதி செய்து கொடுத்து, தங்கள் வர்த்தகத்தை நடத்த மேற்கண்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.என்னென்ன சேவைகள் அளிக்கப்படும். இந்த சேவையை எப்படி பயன்படுத்திக் கொள்வது, ஒவ்வொரு சேவைக்கும் உண்டான கட்டணம் ஆகியவை குறித்த விளக்க அறிக்கையை, இந்த நிறுவனங்கள் வெளியிட உள்ளன. தற்போது மொபைல் போனில், "ப்ரீபெய்டு' கட்டணம் மூலம் அதிகம் பேர் சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதே போல சினிமா, விளையாட்டு தொடர்பான அதாவது கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற வீடியோ காட்சிகளை அளிக்கவும், "ஜிக்சி' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|