முடிந்தது நகைக் கடைகளின் வேலை நிறுத்தம்: ரூ.1,000 கோடி 'அவுட்'முடிந்தது நகைக் கடைகளின் வேலை நிறுத்தம்: ரூ.1,000 கோடி 'அவுட்' ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
மொபைல்போன் மூலம் பல்நோக்கு வர்த்தகத்தை நடத்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2012
12:52

மும்பை : மொபைல்போன் மூலம் கூடுதல் சேவைகளை அளித்து பல்வேறு விதமான வர்த்தகத்தை நடத்த, பிரபல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நம் நாட்டில் தற்போது 90 கோடி பேர், மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். வரும் 2015ல், இந்த எண்ணிக்கை 120 கோடியாக உயர உள்ளது. மொபைல் போன் பேசுவதற்கு மட்டும் என்றில்லாது, இன்டர்நெட் பயன்பாட்டிலும் அதிகமாக வளர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாது, ரயில், விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்வது, தெரியாத இடத்தை தெரிந்து கொள்வதற்குரிய வரைபடங்களை பயன்படுத்துவது போன்றவற்றிலும் முன்னோடியாகத் திகழ்கிறது.சென்னை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, புனே, ஆமதாபாத், ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் பேர் உள்ளனர்.
எனவே, மொபைல் போன் மூலம் மேலும் பல வசதிகளை செய்து கொடுத்து வர்த்தகத்தை நடத்த, பிலிப்கார்ட், வோடபோன், ஜிக்சி போன்ற நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., சேவையும் பெரும் பங்கு வகிக்கிறது. வங்கிக் கணக்கை சரிபார்த்துக் கொள்வது, பயிர்களின் விலை நிலவரம், உடல்நிலை குறித்த தகவலை அறிந்து கொள்ளுதல் போன்ற சேவையை விரிவுப்படுத்தவும், மொபைல் போன் மூலம் தேவையான திரைப்படத்தைப் பார்க்கவும் வசதி செய்து கொடுத்து, தங்கள் வர்த்தகத்தை நடத்த மேற்கண்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.என்னென்ன சேவைகள் அளிக்கப்படும். இந்த சேவையை எப்படி பயன்படுத்திக் கொள்வது, ஒவ்வொரு சேவைக்கும் உண்டான கட்டணம் ஆகியவை குறித்த விளக்க அறிக்கையை, இந்த நிறுவனங்கள் வெளியிட உள்ளன. தற்போது மொபைல் போனில், "ப்ரீபெய்டு' கட்டணம் மூலம் அதிகம் பேர் சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதே போல சினிமா, விளையாட்டு தொடர்பான அதாவது கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற வீடியோ காட்சிகளை அளிக்கவும், "ஜிக்சி' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)