பதிவு செய்த நாள்
25 மார்2012
00:14
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற மார்ச் 16ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 86.20 கோடி டாலர் (4,310 கோடி ரூபாய்) உயர்ந்து, 29 ஆயிரத்து 482 கோடி டாலராக (14 லட்சத்து 74 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, சென்ற மார்ச் 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 103 கோடி டாலர் (5,150 கோடி ரூபாய்) குறைந்து, 29 ஆயிரத்து 396 கோடி டாலராக (14 லட்சத்து 69 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) சரிவடைந்தி ருந்தது. மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 91 கோடி டாலர் அதிகரித்து, 25 ஆயிரத்து 949 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, எவ்வித மாற்றமும் இன்றி, 2,813 கோடி டாலர் என்றளவிலேயே உள்ளது.
எஸ்.டீ.ஆர். மதிப்பு, 3 கோடி டாலர் குறைந்து, 442 கோடி டாலராக குறைந்துள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 1.85 கோடி டாலர் குறைந்து, 278 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|