தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... ரினாக் இந்தியா நிறுவனம் உணவு பதப்படுத்தலுக்கு முக்கியத்துவம் ரினாக் இந்தியா நிறுவனம் உணவு பதப்படுத்தலுக்கு முக்கியத்துவம் ...
கடந்த ஐந்து ஆண்டுகளில்... நிறுவனங்கள் செலுத்திய வரி மூன்று மடங்கு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2012
00:30

புதுடில்லி : கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்திய நிறுவன வரி, மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கணக்கீட்டு காலத்தில், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும், இவற்றின் லாபமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில், 3.1 லட்சம் நிறுவனங்கள், வருமானம் குறித்த தகவல்களை வருமான வரி துறைக்கு தாக்கல் செய்திருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது, 5.1 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆக, ஐந்து ஆண்டுகளில், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை, 65 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூன்று மடங்கு : கடந்த 2006-07ம் ஆண்டில், நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்திய வரி, 79 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2010-11ம் நிதியாண்டில், 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. நிறுவனங்கள் அவை ஈட்டும் மொத்த லாபத்திலிருந்து, குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக செலுத்துகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, நிறுவனங்கள் செலுத்திய வரி அவற்றின் லாபத்தில் 19 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, தற்போது, 24.1 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு காலத்தில், நிறுவனங்களுக்கான வரி 33 சதவீதம் என்றளவில் உள்ளது.
சர்க்கரை துறை : நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, சர்க்கரை துறை நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டன. அப்போது, இத்துறை நிறுவனங்கள் செலுத்திய வரி 3 சதவீதம் என்றளவில் இருந்தது. இத்துறை 2010-11ம் நிதியாண்டில், 26.2 சதவீத அளவிற்கு வரி செலுத்தியுள்ளன. சாப்ட்வேர் உற்பத்தி நிறுவனங்கள் செலுத்திய வரி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, 12 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, கடந்த நிதியாண்டில், 19 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது.
இதே போன்று, தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் பீ.பி.ஓ நிறுவனங்கள் செலுத்திய வரி, 15 சதவீதத்திலிருந்து, 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து, வரி செலுத்தும் விகிதம் உயர்ந்துள்ளது. நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி (எம்.ஏ.டி) விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில், 10 சதவீதத்திலிருந்து, 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, ஒட்டுமொத்த அளவில் நிறுவனங்கள் செலுத்திய வரி அதிகரிப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மருந்து நிறுவனங்கள் : மின்சாரம் மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் செலுத்திய வரி 22 சதவீதம் (16 சதவீதம்), ஜவுளி நிறுவனங்கள் 21 சதவீதம்(16 சதவீதம்), மருந்து நிறுவனங்கள் 21 சதவீதம் (17 சதவீதம்), வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 26 சதவீதம் (19) மற்றும் வாகனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 27 சதவீதம் (24 சதவீதம்) ஆகியவை அதிக அளவில் வரி செலுத்தியுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)