பதிவு செய்த நாள்
27 மார்2012
00:37
சென்னை : ரினாக் இந்தியா நிறுவனம், சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம், உணவு பொருட்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதையடுத்து இந்நிறுவனம், ரெப்ரிஜிரேஷன் சிஸ்டமான, "கூல் பார்ன்' சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆர்.கிருஷ்ணன் பேசியதாவது: இந்தியா, உணவுப் பதப்படுத்துதல் துறையில் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. சர்வதேச அளவில், பால் மற்றும் பால் பொருட்கள், தோட்ட பயிர்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
இந்த பொருட்கள் எளிதில் அழியக் கூடியவைகளாக இருப்பதால், இவற்றை சேமிப்பதற்கு கிடங்குகள் தேவைப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, நிறுவனம், குளிர்பதன சேமிப்பு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.
இந்தியாவில், குளிர்பதன சேமிப்பு கிடங்குகளின் சந்தை மதிப்பு, 1,500 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இதில், நிறுவனத்தின் பங்களிப்பு, 18 சதவீதம் என்றளவில் உள்ளது. பிரிட்டானியா, ஐ.டி.சி., தாஜ் ஓட்டல் போன்றவை முக்கிய வாடிக்கை நிறுவனங்களாக உள்ளன. இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|