பதிவு செய்த நாள்
29 மார்2012
02:34
புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் உருக்கு பொருட்கள் உற்பத்தி, 6.40 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 6.38 கோடி டன்னாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், விற்பனைக்கான உருக்கு பொருட்கள் இறக்குமதி, 56 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 34.50 லட்சம் டன்னாக இருந்தது.
சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், உருக்கு உற்பத்தி, 6.60 கோடி டன்னாக அதிகரித்திருந்தது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில், 6 கோடி டன்னாக இருந்தது. ஆக, சென்ற நிதியாண்டில் உருக்கு உற்பத்தி, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 8.8 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், உருக்கு ஏற்றுமதி, 35 லட்சம் டன்னாகவும், இறக்குமதி, 68 லட்சம் டன்னாகவும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|