பதிவு செய்த நாள்
30 மார்2012
12:31
சென்னை : "அமெரிக்க விசாவிற்கான விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்படவில்லை' என, சென்னைக்கான அமெரிக்க துணை தூதரகத்தின் விசா பிரிவு தலைமை அதிகாரி நிக் மேன்ரிங் கூறினார்.பணி நிமித்தமாக அமெரிக்கா செல்லும், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு, "எச்-1 பி' வகை விசா வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப கட்டணத்தில், 250 அமெரிக்க டாலர்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து, நிக் மேன்ரிங் நிருபர்களிடம் கூறியதாவது: "எச்-1 பி' வகை விசாவிற்கான விண்ணப்ப கட்டணம் தொடர்பாக வந்த செய்தி தவறானது. இக்கட்டணம் உயர்த்தப்படவில்லை; தற்போது உயர்த்தும் திட்டமும் இல்லை. இந்த நிதியாண்டில், "எச்-1 பி' வகை விசாவிற்கு, சென்னை துணை தூதரகத்தில், 57 ஆயிரத்து 218 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது, கடந்த நிதியாண்டை விட, 4 சதவீதம் குறைவு. தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும், "பிளாங்கிட் எல்' வகை விசாவிற்கு, 6,044 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது, சென்ற நிதியாண்டை விட, 24 சதவீதம் அதிகம்.
இனி, சுற்றுலா விசாவை புதுப்பிக்க விரும்புவோர், தீதீதீ.திஞூண்தண்ச்.ஞிணி.டிண என்ற இணையதள முகவரியில், அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின், உரிய ஆவணங்களை, தூதரகத்திற்கு தபாலில் அனுப்பினால் போதும். புதுப்பிக்கப்பட்ட விசா தபாலிலேயே அனுப்பப்படும். விண்ணப்பதாரர்கள் வசதிக்காக, விசாவிற்கான நேர்காணலை ஆங்கிலம் தவிர, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் இந்தி மொழிகளில் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், மொத்தம் ஐந்து லட்சம் அமெரிக்க விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 50 சதவீதம் இந்தியர்களுக்கும், 12 சதவீதம் சீனர்களுக்கும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு நிக் மேன்ரிங் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|