11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்... 54,000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்... 54,000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி ... புதிய அனல் மின்நிலையம் பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,500 கோடி கடனுதவி புதிய அனல் மின்நிலையம் பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,500 கோடி கடனுதவி ...
பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.1.76 லட்சம் கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2012
00:15

புது டில்லி:வரும் 2012-13ம் நிதியாண்டில் 17 பொதுத்துறை நிறுவனங்கள், உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் 1.76 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரபுல் படேல் பார்லிமென்டில் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:பொதுத்துறை நிறுவனங்கள், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள முதலீடுகளால், நீண்டகால அடிப்படையில், அவற்றின் நிதி சார்ந்த செயல்பாடுகள் மேம்படும்.பெல் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்திற்கும், இதர பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக, சிறப்பு செயல்பாட்டுக் குழுக்களை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.பெல் நிறுவனம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளதால், ஏற்றுமதியை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந் நிறுவனத்தின் ராணுவ சாதனங்கள் உற்பத்தித் திறன் குறித்து, பாதுகாப்பு அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.
இத்துறை மட்டுமின்றி, பெல் அதன் பாரம்பரிய பொறியியல் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அதிவிரைவு போக்குவரத்து திட்டம், குடிநீர் மேலாண்மை திட்டம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆகியவற்றிலும் வர்த்தக வாய்ப்புகளை ஆராய வேண்டும்.மின் உற்பத்தி சாதனங்களைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் நிறுவு திறன், நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட 7,145 மெகாவாட் என்ற இலக்கை விஞ்சி 7,910 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)