பதிவு செய்த நாள்
31 மார்2012
00:15
புது டில்லி:வரும் 2012-13ம் நிதியாண்டில் 17 பொதுத்துறை நிறுவனங்கள், உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் 1.76 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரபுல் படேல் பார்லிமென்டில் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:பொதுத்துறை நிறுவனங்கள், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள முதலீடுகளால், நீண்டகால அடிப்படையில், அவற்றின் நிதி சார்ந்த செயல்பாடுகள் மேம்படும்.பெல் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்திற்கும், இதர பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக, சிறப்பு செயல்பாட்டுக் குழுக்களை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.பெல் நிறுவனம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளதால், ஏற்றுமதியை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந் நிறுவனத்தின் ராணுவ சாதனங்கள் உற்பத்தித் திறன் குறித்து, பாதுகாப்பு அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.
இத்துறை மட்டுமின்றி, பெல் அதன் பாரம்பரிய பொறியியல் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அதிவிரைவு போக்குவரத்து திட்டம், குடிநீர் மேலாண்மை திட்டம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆகியவற்றிலும் வர்த்தக வாய்ப்புகளை ஆராய வேண்டும்.மின் உற்பத்தி சாதனங்களைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் நிறுவு திறன், நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட 7,145 மெகாவாட் என்ற இலக்கை விஞ்சி 7,910 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|