பதிவு செய்த நாள்
04 ஏப்2012
23:50
மும்பை: நாட்டின் அடிப்படை கட்டமைப்பு துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, சிமென்ட் விற்பனை சென்ற மார்ச் மாதத்தில் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த அளவில், சிமென்டின் விலை உயர்ந்துள்ள நிலையிலும், நாட்டின் பல மாநிலங்களில் இதன் விற்பனை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மூலப் பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி வரி மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், இத்துறை நிறுவனங்கள், 50 கிலோ கொண்ட சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு சராசரியாக, 10-20 ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளன.பயன்பாடுகுறிப்பாக, நாட்டின் கிழக்கு பகுதிகளில் சிமென்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அளிப்பு இல்லாததால், இப்பகுதிகளில், ஒரு மூட்டை சிமென்ட்டின் விலை 20-25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பீகார் ஒடிசா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், அதிகளவில் சிமென்ட் ஆலைகள் இல்லாததால், இம்மாநிலங்களுக்கு தேவையான சிமென்ட், மத்திய பிரதேச மாநிலத்திலிருந்தே பெறப்படுகிறது.இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய நிறுவனத்தின் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதையடுத்து, சிமென்ட் அளிப்பு குறைந்து போனது. இதன் காரணமாகவும், கிழக்கு பகுதிகளில் இதன் விலை உயர்ந்துள்ளதாக, இப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.மேற்கண்டவை தவிர, குஜராத் மாநிலத்தில், அம்மாநில அரசு, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை அதிகளவில் மேற்கொண்டு வருகிறது. இதனால், அந்த மாநிலத்திலும், சிமென்ட் பயன்பாடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.சரக்கு கட்டணம்சிமென்ட்டிற்கான தேவையும், உற்பத்தியும் அதிகரித்துள்ள அதே நிலையில், நிலக்கரி, சுண்ணாம்புகல், ஜிப்சம் உள்ளிட்ட பல மூலப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே துறை அண்மையில், சிமென்ட், நிலக்கரி போன்றவற்றிற்கான சரக்கு போக்குவரத்து கட்டணத்தை, 18 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால், இத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்து போயுள்ளதாக, முன்னணி சிமென்ட் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூலப் பொருட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வை சமாளிக்கும் வகையில், பல நிறுவனங்கள், சிமென்ட் விலையை உயர்த்தி உள்ளன. இது நுகர்வோரை பாதிப்பதாக உள்ளது.விற்பனை வளர்ச்சிசென்ற நிதியாண்டில், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடைசி காலாண்டில், ஏசிசி, அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் சிமென்ட் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஏசிசி மற்றும் அல்ட்ரா டெக் ஆகிய நிறுவனங்களின் விற்பனை முறையே, 67.20 லட்சம் டன் மற்றும் 1.13 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலாண்டில் முறையே, 62.20 லட்சம் டன் மற்றும் 1.05 கோடி டன்னாக இருந்தது. இதே காலாண்டில், அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின், விற்பனை 10 சதவீதம் அதிகரித்து, 55.50 லட்சம் டன்னிலிருந்து, 60.90 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.ஜே.பி.அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சிமென்ட் விற்பனை, 40 லட்சம் டன்னிலிருந்து, 60 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.உற்பத்திசென்ற நிதியாண்டின் கடைசி காலாண்டில், ஏசிசி நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி, சென்ற ஆண்டின் இதே காலாண்டை விட, 7 சதவீதம் அதிகரித்து, 62.20 லட்சம் டன்னிலிருந்து, 67 லட்சம் டன்னாகவும், அல்ட்ரா டெக் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி 7 சதவீதம் உயர்ந்து, 1.04 கோடி டன்னிலிருந்து, 1.12 கோடி டன்னாகவும் உயர்ந்துள்ளது.அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின், சிமென்ட் விற்பனை 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 55.90 லட்ச டன்னிலிருந்து, 61 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|