இந்தியா-- செக் குடியரசு வர்த்தகம்ரூ.15,000 கோடியை தாண்டும் இந்தியா-- செக் குடியரசு வர்த்தகம்ரூ.15,000 கோடியை தாண்டும் ... புண்ணாக்கு ஏற்றுமதி 55 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி 55 லட்சம் டன் ...
விலை உயர்வை கட்டுப்படுத்த... சிமென்ட்டுக்கு இரட்டை வரி விதிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2012
00:03

பொள்ளாச்சி: சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த, இரட்டை வரிவிதிப்பு முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது.இரும்பு கம்பிகள் இக்கூட்டமைப்பின் தலைவர் மோகன்ராஜ் கூறியதாவது:கட்டுமான பணிகளுக்கு முக்கிய மூலப்பொருட்களான சிமென்ட், இரும்பு கம்பிகள் போன்றவற்றின் விலை 40 முதல் 60 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில், மூன்று மாதங்களில், ஒரு டன் இரும்பு கம்பி விலை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 58 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சிமென்ட் மூட்டை 260 ரூபாயில் இருந்து, 310 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜல்லி கற்கள் ஒரு யூனிட் 300 ரூபாயும், பெயிண்ட் மற்றும் மின் சாதனங்கள் விலை, 20 சதவீதமும் உயர்ந்துள்ளது. விலை உயர்வால் கட்டுமான பணிகள் மேற்கொள்ள சதுர அடிக்கு, 400 ரூபாய் உயர்ந்துள்ளதால், கட்டுமான பணிகள் மேற்கொள்வதை மக்கள் குறைத்துள்ளனர். இதனால், மாநிலத்தில், 20 ஆயிரம் கட்டட பொறியாளர்களும், 10 ஆயிரம் பில்டர்களும், 30 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.கடந்த 2001- 06ல் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, சிமென்ட் விலை மூட்டைக்கு, 135 ரூபாயாக இருந்தது. அப்போது திடீரென சிமென்ட் விலை மூட்டைக்கு 200 ரூபாயாக உயர்த்தப்பட்டதும், சிமென்ட்டுக்கு இரட்டை வரி விதிக்கப்பட்டு விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது.இரட்டை வரி அதேபோன்று, மீண்டும் சிமென்ட்டுக்கு இரட்டை வரி விதிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில், மின்கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கட்டுமான பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.என@வ சிமென்ட்டுக்கு இரட்டை வரிவிதிப்பை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மோகன்ராஜ் தெரிவித்தார்.இதுகுறித்து நாஸ்காம் அமைப்பின் மண்டல இயக்குனர் புரு÷ஷாத்தமன் கூறும்போது, "மின்சாரம் இருந்தால் மட்டுமே ஐ.டி.துறை இயங்க முடியும். மின்வாரியம் மூலம் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தும் போது, ஒரு யுனிட் மின்சாரத்திற்கு, நான்கு ரூபாய் செலவாகிறது. இது, ஜெனரேட்டரை பயன்படுத்தும் போது, 13-15 ரூபாயாக அதிகரிக்கிறது' என்றார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)