பதிவு செய்த நாள்
07 ஏப்2012
00:01
கோல்கட்டா :இந்தியா, செக் குடியரசு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 300 கோடி டாலரை (15 ஆயிரம் கோடி ரூபாய்) தாண்டும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, இந்தியாவிற்கான செக் குடியரசின் தூதர் மிலோஸ்லெவ் ஸ்டேசக் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:இந்தியா, செக் குடியரசு நாடுகளுக்கு இடையிலான மொத்த வர்த்தகத்தில், மூன்றில் ஒரு பங்கு மோட்டார் வாகனத் துறையை சார்ந்துள்ளது.மேலும், சுற்றுலாத் துறை வாயிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்ற நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், 150 கோடி டாலர் (7,500 கோடி ரூபாய்) என்றளவில் இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 200 கோடி டாலரை (10 ஆயிரம் கோடி ரூபாய்) தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.செக் நாட்டிற்கு, நேரடி விமான போக்குவரத்தை இயக்குவதற்காக, பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.இதையடுத்து, அடுத்த மூன்றாண்டுகளில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|