அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.47,935 கோடி முதலீடு அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.47,935 கோடி முதலீடு ... மதுரை ரயில்வே கோட்டம் ரூ.530 கோடி வருவாய் சாதனை மதுரை ரயில்வே கோட்டம் ரூ.530 கோடி வருவாய் சாதனை ...
விரிவாக்க நடவடிக்கைகளை அடுத்து 2013ம் ஆண்டில்... உருக்கு உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2012
23:57

மும்பை : வரும் 2013ம் ஆண்டில், உள்நாட்டில் உள்ள உருக்கு உற்பத்தி நிறுவனங்கள், அவற்றின் கச்சா உருக்கு உற்பத்தித் திறனை, கூடுதலாக 2 கோடி டன் அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, நாட்டின் மொத்த கச்சா உருக்கு உற்பத்தித் திறன், வரும் ஆண்டில், 10 கோடி டன்னாக அதிகரிக்கும் என 'உலோகத் துறையின் செயல்பாடு' என்ற தலைப்பில், நடைபெற்ற கருத்தரங்கில், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் விக்ரம் அமீன் தெரிவித்தார்.டாட்டா ஸ்டீல்தற்போது, நாட்டின் மொத்த கச்சா உருக்கு உற்பத்தித்திறன்,8 கோடி டன் என்ற அளவில் உள்ளது. உள்நாட்டில், உருக்கு உற்பத்தியில், முன்னணியில் உள்ள டாட்டா ஸ்டீல், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர், ராஷ்டிரிய இஸ்பத் நிகாம், எஸ்ஸார் ஸ்டீல் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ.ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் புதிய தொழிற்சாலைகளின் வாயிலாக உருக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.உலக அளவில், தற்போது, சீன நாட்டின் உருக்கு உற்பத்தித் திறன், 70 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜப்பானின் உற்பத்தித் திறன், 11 கோடி டன் என்ற அளவிலும், அமெரிக்காவின் உற்பத்தித் திறன், 8.60 கோடி டன் என்ற அளவிலும் உள்ளது.வட்டி öணூலவினம்மத்திய அரசு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சுணக்கம் காட்டி வருவது மற்றும் வட்டி செலவினம் உயர்ந்துள்ளது போன்றவற்றால், உருக்கு பொருட்களுக்கான தேவை வளர்ச்சி மிதமான அளவிலேயே உள்ளது.இந்நிலையில், பல உருக்குத் துறை நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரித்து வருகின்றன. இதனால், தேவையை விட, உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உருக்குத் துறை நிறுவனங்கள், முழு உற்பத்தித் திறனில் செயல்பட முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என, விக்ரம் அமீன் குறிப்பிட்டார்.உள்நாட்டில், இரும்புத் தாது மற்றும் சிறப்பு வகை நிலக்கரிக்கு பற்றாக்குறை உள்ளது. எனவே, மத்திய அரசு, மூலப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும். குறிப்பாக, சுப்ரீம் கோர்ட், கார்நாடக மாநிலத்தில், இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்குத் தடை விதித்துள்ளது. இதனால், இரும்புத் தாது விலை உயர்ந்துள்ளது. இதேபோல், கோவா அரசும், இரும்புத் தாது உற்பத்தி குறித்து தெளிவான வரைவு அறிக்கையை அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளுக்கு இடையே, உருக்குத் துறை நிறுவனங்கள், நல்ல அளவில் உருக்கு உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன என, அமீன் மேலும்கூறினார்.கால தாமதம்உருக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என கருத்தரங்கில் பங்கேற்ற உருக்கு அமைச்சகத்தின் தலைமைப் பொருளாளர் ஏ.எஸ்.பிரோசா தெரிவித்தார்.உருக்கு உற்பத்தி உபரியாகும் என்ற எதிர்பார்ப்பில், உற்பத்தித் திறனை உயர்த்திக் கொள்ளும் திட்டங்களை காலதாமதப்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செலவினங்கள் உயர்ந்து, திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.உருக்கிற்கான தேவை அதிகரிக்கும் போது, அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு நடவடிக்கைகள் கைகொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.டாட்டா ஸ்டீல், செயில், ஜிந்தால் ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள், உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், புதிய தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. ராஷ்டிரிய இஸ்பத் நிகாம் நிறுவனம், அதன் விசாகப்பட்டினம் தொழிற்சாலையில், கூடுதலாக 30 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யும் வகையில், விரிவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.நவீனமயம்இதையடுத்து, இத்தொழிற்சாலையின் உற்பத்தித் திறன்,63 லட்சம் டன்னாக உயரும். இதுதவிர, கூடுதலாக, 10 லட்சம் டன் உற்பத்தி மேற்கொள்ளும் வகையில், அதன் மற்றொரு தொழிற்சாலையை நவீனப்படுத்தி வருகிறது.எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம், அதன் ஹசீரா தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு, 46 லட்சம் டன்னிலிருந்து, 1 கோடி டன்னாக அதிகரிக்கும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளது. ஜே.எஸ். டபிள்.யூ.ஸ்டீல் நிறுவனம், கடந்த ஆண்டு, அதன் உருக்கு உற்பத்தித் திறனை, 70 லட்சம் டன்னிலிருந்து 1 கோடி டன்னாக உயர்த்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)