பதிவு செய்த நாள்
10 ஏப்2012
12:52
புதுடில்லி: கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. இதனையடுத்து பெப்சி, கோக-கோலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் குளிர் பானங்கள் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. பெப்சிகோ நிறுவனம் அதன் மிரிண்டா, ஆரஞ்ச் மசாலா மற்றும் ஆரஞ்ச் மேங்கோ ஆகிய குளிர் பானங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்நிறுவனம் புதுமையான விதத்தில் குளிர் பானங்களை அறிமுகம் செய்துள்ளது. காட்பரி இந்தியா நிறுவனம், சிறுவர்களை இலக்காகக் கொண்டு புத்துணர்ச்சிïட்டும் ஊட்ட சத்துமிக்க டேங்க் மேங்கோ குளிர் பானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. நம் நாட்டை சேர்ந்த ரஸ்னா நிறுவனமும் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ரஸ்னா பெவரேஜஸ் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.50,000 கோடி (1,000 கோடி டாலர்) மதிப்பிற்கு குளிர் பானங்கள் விற்பனையாகின்றன. இவற்றின் விற்பனை ஆண்டுக்கு சராசரியாக 6-7 சதவீதம் அதிகரித்து வருகிறது. மத்திய உணவு பதப்படுத்தும் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|