தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ... பத்து நறுமண பொருள் பூங்கா : மத்திய அரசு முடிவு பத்து நறுமண பொருள் பூங்கா : மத்திய அரசு முடிவு ...
இந்தியாவில் முதன் முதலாக...ஏர்டெல் "4ஜி' மொபைல்போன் சேவை அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2012
23:52

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இந்தியாவில் முதன் முதலாக பார்தி ஏர்டெல் நிறுவனம், "4 ஜி' தொழில்நுட்பத்திலான மொபைல் போன் சேவையை கோல்கட்டாவில் நேற்று அறிமுகப்படுத்தியது.மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் இச்சேவையைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பார்தி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பார்தி மிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அலைவரிசை உரிமம்இந்தியாவில் பெரும்பாலான மொபைல் போன் நிறுவனங்கள், "2ஜி' தொழில்நுட்பத்திலான மொபைல் போன் சேவையை வழங்கி வருகின்றன. கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், "3ஜி' தொழில்நுட்பத்தில் அகண்ட அலைவரிசை உரிமத்திற்கான ஏலம் விடப்பட்டது.இந்த உரிமையை பெற்ற ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த 2011ம் ஆண்டு "3ஜி' தொழில்நுட்பத்திலான மொபைல் போன் சேவையை அறிமுகப்படுத்தின."3ஜி' தொழில்நுட்பத்தில், வினாடிக்கு 21 மெகா பைட் வேகத்தில் தகவல்கள், படங்கள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்ய முடியும். மொபைல்போன் திரையில், எதிர்முனையில் உள்ளவரைப் பார்த்து, பேசவும், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றைக் காணவும், வேகமாகப் பதிவிறக்கிக் கொள்ளவும் முடியும்.அதிக வŒதிஇது போன்ற எண்ணற்ற வசதிகளை மின்னல் வேகத்தில் மேற்கொள்ள புதிய "4ஜி' டி.டி-எல்.டி.இ., அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம் உதவுகிறது. இது, "3ஜி' தொழில்நுட்பத்தை விட 5 மடங்கு வேகத்தில் செயல்பட வல்லது. அதாவது வினாடிக்கு 100 மெகா பைட் வேகத்தில் தகவல்கள், படங்கள், இசை உள்ளிட்டவற்றை பரிமாறிக் கொள்ளலாம். அவற்றை பதிவிறக்கவோ அல்லது பதிவேற்றவோ செய்யலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உடனுக்குடன் கண்டு களிக்கலாம். விருப்பமான திரைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை குறிப்பிட்ட கட்டணத்தில் விரும்பும் நேரத்தில் பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது, "2ஜி' மற்றும் "3ஜி' என இரண்டு தொழில்நுட்பங்களுக்கும் ஏற்புடையது என்பதால், தொலைத் தொடர்பு ஒருங்கிணைப்பு சேவை சிறப்பாக இருக்கும் என ஏர்டெல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏர்டெல் நிறுவனம் "4ஜி' மொபைல் போன் சேவைக்கு, குறைந்தபட்ச கட்டணம் மாதம் 999 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இச்சேவைக்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவற்றை சீனாவின் இசட்.டி.ஈ., நிறுவனம் செய்து தந்துள்ளது. கோல்கட்டா தவிர மகாராஷ்ட்ரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் "4 ஜி' சேவைக்கான உரிமையை ஏர்டெல் பெற்றுள்ளது.பொதுத்துறையைச் சேர்ந்த பி.எஸ். என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்கள், "4ஜி' சேவையை முறையே 20 மற்றும் 2 வட்டங்களுக்கு பெற்றுள்ளன. விரைவில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் "4ஜி' சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.குறைபாடுகள்ஏற்கெனவே, இந்நிறுவனங்களின் "3ஜி' சேவைக்கு, மொபைல் போன் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு இல்லாத நிலையில், "4ஜி' சேவைக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது."3ஜி' சேவை குறித்த விழிப்புணர்வு இல்லாதது, அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள், உயர்வான கட்டணம் உள்ளிட்டவை தான் "3ஜி' சேவை வளர்ச்சிக்குத் தடை கற்களாக உள்ளன என இத்துறையைச் சேர்ந்த வல்லுனர் ஒருவர் தெரிவித்தார்.

"3ஜி' அலைவரிசை சேவை வெற்றி பெறவில்லை -கபில்சிபல்
நிறுவனங்கள் "3ஜி' அகண்ட அலைவரிசைக்காக பெரும் தொகையைச் செலவிட்டுள்ளன. ஆனால், இச்சேவை பிரபலமாகாததால், போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை நிறுவனங்களால் மேற்கொள்ள முடியவில்லை. அதனால், இதுவரை "3ஜி' சேவை வெற்றி பெறவில்லை. "4ஜி' டி.டி-எல்.டி., சேவை, அடிப்படையில் கம்பியில்லாமல் இணையத்தை அணுகும் வசதி கொண்டது. 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை வசதி கிடைக்கும்போது, அசல் "4ஜி' சேவை முழு அளவில் கிடைக்கும் என கபில் சிபல் தெரிவித்தார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)