பதிவு செய்த நாள்
16 ஏப்2012
23:51
புதுடில்லி: இந்தியாவில், தற்போது, தனிநபர் உருக்கு பயன்பாடு, 55 கிலோ என்றளவில் உள்ளது. அதேசமயம், இது, மற்ற நாடுகளில் உயர்ந்து காணப்படுவதாக, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.சென்ற நிதியாண்டில், உள்நாட்டில் கச்சா உருக்கு உற்பத்தி, 3.3 சதவீதம் உயர்ந்து, 7.20 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இதே நிதியாண்டில், 27 லட்சம் டன் உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.வரும் 2013ம் நிதியாண்டில், நாட்டின் உருக்கு பயன்பாடு, 4-5 வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் தனிநபர் உருக்கு பயன்பாடு 55 கிலோ என்றளவில் உள்ளது. அதேசமயம், தென் கொரியாவின் தனிநபர் உருக்கு பயன்பாடு, 936 கிலோ என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.இது, ஜப்பானில், 419 கிலோவாகவும், சீனாவில், 405 கிலோவாகவும், அமெரிக்காவில், 187 கிலோவாகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|