தனிநபர் உருக்கு பயன்பாடு 55 கிலோ தனிநபர் உருக்கு பயன்பாடு 55 கிலோ ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நடப்பாண்டு மார்ச் மாதத்தில்... நாட்டின் பொது பணவீக்கம் 6.89 சதவீதமாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
23:55


புதுடில்லி: மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம், சென்ற மார்ச் மாதத்தில், 6.89 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதமான பிப்ரவரியில், 6.95 சதவீதமாக சற்று அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில், பணவீக்கம் 9.68 சதவீதமாக மிகவும் அதிகரித்திருந்தது.சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் பணவீக்கம் 6.55 சதவீதத்திலிருந்து, 6.89 சதவீதமாக மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.தயாரிப்பு துறைசென்ற மார்ச்சில், உணவு சாராத தயாரிப்பு துறையின் பணவீக்கம் 4.87 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதத்தில், 5.75 சதவீதம் என்றளவில் இருந்தது.கணக்கீட்டு காலத்தில், காய்கறிகள், பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்தே காணப்பட்டது. இருப்பினும், வெங்காயம், பழங்கள், புரத சத்து பொருட்களின் விலை சரிவடைந்து காணப்பட்டதால், அம்மாதத்திற்கான பொதுப் பணவீக்கம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பணவீக்கம் குறைந்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்கு விக்கும் வகையில், இன்று நடைபெறும் ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கையில்,வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' மற்றும் ரொக்க இருப்பு விகிதங்களை குறைக்ககூடும் என பொருளியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இருப்பினும், சென்ற மார்ச் மாதத்தில், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 9.94 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய பிப்ரவரியில், 6.07 சதவீதமாக குறைந்திருந்தது.பருப்பு வகைகள்கணக்கீட்டு காலத்தில், வெங்காயத்தின் விலை 24.23 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது, பிப்ரவரி மாதத்தில், 48.50 சதவீத அளவிற்கு வீழ்ச்சி கண்டிருந்தது.அதேசமயம், முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றின் விலை 17.71 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, பிப்ரவரி மாதத்தில், 20 சதவீதம் அளவிற்கு குறைந்து காணப்பட்டது.சென்ற மார்ச்சில், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் விலை, முறையே 10.05 சதவீதம் மற்றும் 30.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற பிப்ரவரியில், காய்கறிகள் விலை 1.52 சதவீதம் என்ற அளவில்தான் அதிகரித்து காணப்பட்டது.பால் பொருட்கள்கணக்கீட்டு மாதத்தில், பால் மற்றும் பால் பொருட்களின் விலை 15.29 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், அரிசி மற்றும் உணவு தானியங்கள் விலை முறையே 4.73 சதவீதம் மற்றும் 4.41 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், உருளைக்கிழங்கின் விலை 11.60 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்துள்ளது.மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கிடுவதில், உணவுப் பொருட்களின் பங்களிப்பு 14.3 சதவீதமாக உள்ளது.தயாரிப்பு துறை பொருட்களுக்கான பணவீக்கம் 5.75 சதவீதத்திலிருந்து, 4.87 சதவீதமாக குறைந்துள்ளது.மத்திய நிதியமைச்சகம் மதிப்பீடு செய்திருந்த, 6.5 சதவீதத்தை விட மார்ச் மாத பணவீக்கம் சற்று அதிகரித்தே (6.89 சவீதம்) உள்ளது.முக்கிய பொருட்களுக்கான பணவீக்கம் 9.62 சதவீதமாக மிகவும் உயர்ந்துள்ளது. இது,பிப்ரவரியில் 6.28 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.சென்ற 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து, தயாரிப்பு துறைக்கான பணவீக்கம் 6 சதவீதம் என்ற அளவை தாண்டியே காணப்படுகிறது. குறிப்பாக, உருக்கு பொருட்கள் விலை 17.18 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், சமையல் எண்ணெய் விலையும் 9.87 சதவீதம் உயர்ந்துள்ளது.மேலும், புகையிலை பொருட்கள் மற்றும் அடிப்படை உலோகப் பொருட்களின் விலை 8.22 சதவீதம் மற்றும் 9.51 சதவீதமாக உள்ளது.நூலிழை, எண்ணெய்வித்துக்கள் உள்ளிட்ட உணவு சாராத முக்கிய பொருட்களின் விலை, சென்ற மார்ச் மாதத்தில் 1.20 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. இது, சென்ற பிப்ரவரியில், 2.56 சதவீதம் என்றளவில் மிகவும் பின்னடைவை கண்டிருந்தது. மேலும், மின் மற்றும் எரிபொருள் துறைக்கான பணவீக்கம் 10.41 சதவீதமாக உள்ளது. இது, இதற்கு முந்தைய பிப்ரவரியில், 12.83 சதவீதமாக மிகவும் உயர்ந்து காணப்பட்டது.வட்டி விகிதம்கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், நாட்டின் பொதுப் பணவீக்கம் இரட்டை இலக்க அளவில் அதிகரித்து காணப்பட்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 2010ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலுமாக, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 13 முறை (3.50 சதவீதம்) உயர்த்தியது.மேலும், சென்ற ஜனவரியிலிருந்து, பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதங்களை (சி.ஆர்.ஆர்.) குறைத்தது.உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, மத்திய அரசு, முக்கிய பொருட்களின் அளிப்பில் உள்ள குறைபாடுகளை களைய தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)