பதிவு செய்த நாள்
19 ஏப்2012
16:01
புதுடில்லி: 2011-12ம் நிதி ஆண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 4284 கோடி டாலராக (ரூ.2.14 லட்சம் கோடி) குறைந்துள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 4800 கோடி டாலரைக் காட்டிலும் 11 சதவீதம் குறைவாகும். முந்தைய 2010-11ம் நிதி ஆண்டில் இந்த ஏற்றுமதி 4,299 கோடி டாலராக இருந்தது. எனவே, இதனுடன் ஒப்பிடும்போது தற்போதைய ஏற்றுமதியில் குறிப்பிடும்படியான சரிவு ஏற்படவில்லை என நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகம் விரும்பப்படுகிறது. தவிர, பட்டை தீட்டப்படாத வைரங்களை பெருமளவில் இறக்குமதி செய்து மதிப்புக்கூட்டி வைர நகைகளாக மறு ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் பட்டை தீட்டப்படாத வைர இறக்குமதி மீதான வரியை அரசு அதிகரித்தது. இதனையடுத்து, அறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி குறைய தொடங்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|