பதிவு செய்த நாள்
26 ஏப்2012
00:14
இந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சீனா நீக்கியுள்ளது. இதையடுத்து, ஈரானுடன் பணப்பரிவர்த்தனை பிரச்சனையை சந்தித்து வந்த இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு,சீனா புதிய சந்தை வாய்ப்பை வழங்கியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகம் உற்பத்தியாகிறது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், பாசுமதி அரிசி ஏற்றுமதி 25 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில் 22 லட்சம் டன்னாக இருந்தது.
நடப்பாண்டில், பாசுமதி நெல் சாகுபடிக்கான, நடவுப் பணி இன்னும் தொடங்கவில்லை. எனவே, அதன் பயிர் பரப்பளவு குறித்து மதிப்பிடப்படவில்லை என இத்துறை சார்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.உள்நாட்டு சந்தையில், ஒரு டன் பாசுமதி அரிசி 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு அதிக அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது, சீனாவிற்கும் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதால், பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள் பயன் அடைவார்கள்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|