பதிவு செய்த நாள்
01 மே2012
10:49
புதுடில்லி: ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை ரூ. 5 அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் ரூ. 3 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. நடந்து முடிந்த பராளுமன்ற ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ்திரிவேதி பதவியை பறித்து, முகுல்ராயை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து ரயில் கட்டணங்கள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் பிளாட்பாரம் டிக்கெட் விலை ஏற்றத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ரூ.3 லிருந்து ரூ.5 ஆக அதிகரிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று முதல் அந்த உத்தரவு அமலக்கு வருகிறது.
இனி ரயில்நிலையங்களில் உறவினர்களை வழியனுப்ப வருபவர்கள் பிளாட்பாரம் டிக்கெட்டிற்கு ரூ. 5 செலுத்த வேண்டும். இந்த பிளாட்பாரம் டிக்கெட்டின் மதிப்பு இரண்டு மணி நேரம் மட்டுமே செல்லத்தக்கதாகும். இதற்காக வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் புதிய விலையுடன் டிக்கெட்டுகள் வைக்க ரயில்வே வர்த்தகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|