ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ. 5 : இன்று முதல் அமல்ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ. 5 : இன்று முதல் அமல் ... "இரிடா' அமைப்பு சார்பில் இணையதள சேவை துவக்கம் "இரிடா' அமைப்பு சார்பில் இணையதள சேவை துவக்கம் ...
பீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மானியம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2012
11:20

பீடி தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில், தமிழக அரசின் மானியம், 5,000 ரூபாயில் இருந்து, 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2.40 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும், திருநெல்வேலி, வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளனர். இவர்களுக்கு, மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை வழங்கும் பல்வேறு சலுகைகளில், ஒருங்கிணைந்த வீட்டு வசதி திட்டமும் ஒன்று.
மானியம் : இத்திட்டபடி, வீடு கட்டுவதற்கான செலவு, 45 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், 40 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. 5,000 ரூபாயை பயனாளிகள் செலுத்த வேண்டும்; இதை, தமிழக அரசு மானியமாக வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு சட்டசபையில் மானியக் கோரிக்கையின் போது பதிலளித்த தொழிலாளர் துறை அமைச்சர், "இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்துக்கு, வீடு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் என, தமிழக அரசு நிர்ணயித்து உள்ளது. அது போல, பீடி தொழிலாளர்களுக்கும் வீடு கட்டும் திட்டத்துக்கான கட்டுமானத் தொகை, ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும்' என அறிவித்தார்.
ரூ.60 ஆயிரமாக உயர்வு : இதற்கான பரிந்துரை, தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறைக்கு அனுப்பப்பட்டது. இதை ஏற்ற தொழிலாளர் நலத் துறை, பீடி தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்துக்கு, தமிழக அரசின் மானியத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் மானியமாக, 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். குறைந்தது ஓராண்டு இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்; சொந்தமாக இடம் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன், மானியத் தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)