பதிவு செய்த நாள்
02 மே2012
13:05
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீஸல் விலைகளுக்கு இடையே பெரும் இடைவெளி உள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் கார்களின் விற்பனை குறைந்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பெட்ரோல் கார்கள் விற்பனையை அதிகரிக்க செய்ய, கார் நிறுவனங்கள் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளன. இதன்படி, டீலர்களுக்கு, பெட்ரோல் கார் மீது வழங்கப்படும் கமிஷனை அதிகரித்துள்ளன. இது குறித்து மாருதி சுசூகி நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" பெட்ரோல் கார்களின் ஸ்டாக் அதிகரித்து விட்டது. அவற்றை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில், பெட்ரோல் கார்களுக்கு டீலர்கள் தங்கள் தரப்பில் இருந்து, குறைந்த அளவில் வாடிக்கையாளர்களுக்கு பண தள்ளுபடி சலுகை அளிப்பார்கள். இது போதுமானதாக இல்லை. எனவே, தான் நாங்கள் பெட்ரோல் கார்களுக்கான டீலர் கமிஷன் தொகையை உயர்த்தியுள்ளோம்.
முன்பு பெட்ரோல் கார்களுக்கு, 4 சதவீத கமிஷன் அளித்து வந்தோம். தற்போது இது, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், டீஸல் கார்களுக்கான கமிஷனில் எந்த மாற்றமும் இல்லை,'' என்றார்.ஹுண்டாய் நிறுவனமும், பெட்ரோல் கார்களுக்கான டீலர் கமிஷனை, 8 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களும், கூடுதலாக, 2 சதவீதம் கமிஷன் தர முன் வநதுள்ளன.
இது குறித்து டீலர்கள் தரப்பில் கூறுகையில்," வாகன கடன்களுக்கான வட்டி வீதம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில், பெட்ரோல் கார்களுக்கான டீலர் கமிஷனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் கார் விற்பனையை அதிகரிக்க உதவும்' என்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|