தங்கம் விலை விர்ர்ர்.... ஒரு சவரன் ரூ.22032தங்கம் விலை விர்ர்ர்.... ஒரு சவரன் ரூ.22032 ... எண்ணெய் நிறுவனங்களுக்கு தினம் ரூ.518 கோடி இழப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு தினம் ரூ.518 கோடி இழப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பெட்ரோல் கார்கள் விற்பனை அதிகரிக்க புது யுக்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
13:05

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீஸல் விலைகளுக்கு இடையே பெரும் இடைவெளி உள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் கார்களின் விற்பனை குறைந்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பெட்ரோல் கார்கள் விற்பனையை அதிகரிக்க செய்ய, கார் நிறுவனங்கள் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளன. இதன்படி, டீலர்களுக்கு, பெட்ரோல் கார் மீது வழங்கப்படும் கமிஷனை அதிகரித்துள்ளன. இது குறித்து மாருதி சுசூகி நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" பெட்ரோல் கார்களின் ஸ்டாக் அதிகரித்து விட்டது. அவற்றை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில், பெட்ரோல் கார்களுக்கு டீலர்கள் தங்கள் தரப்பில் இருந்து, குறைந்த அளவில் வாடிக்கையாளர்களுக்கு பண தள்ளுபடி சலுகை அளிப்பார்கள். இது போதுமானதாக இல்லை. எனவே, தான் நாங்கள் பெட்ரோல் கார்களுக்கான டீலர் கமிஷன் தொகையை உயர்த்தியுள்ளோம்.
முன்பு பெட்ரோல் கார்களுக்கு, 4 சதவீத கமிஷன் அளித்து வந்தோம். தற்போது இது, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், டீஸல் கார்களுக்கான கமிஷனில் எந்த மாற்றமும் இல்லை,'' என்றார்.ஹுண்டாய் நிறுவனமும், பெட்ரோல் கார்களுக்கான டீலர் கமிஷனை, 8 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களும், கூடுதலாக, 2 சதவீதம் கமிஷன் தர முன் வநதுள்ளன.
இது குறித்து டீலர்கள் தரப்பில் கூறுகையில்," வாகன கடன்களுக்கான வட்டி வீதம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில், பெட்ரோல் கார்களுக்கான டீலர் கமிஷனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் கார் விற்பனையை அதிகரிக்க உதவும்' என்றனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)