பதிவு செய்த நாள்
04 மே2012
00:56
புதுடில்லி:ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, இரண்டு ரூபாய் முகமதிப்பு கொண்ட, பங்கு ஒன்றிற்கு, 45 ரூபாய் இறுதி டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம், சென்ற 2011-12ம் நிதியாண்டில், 62 லட்சத்து 35 ஆயிரத்து 205 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் விற்றுமுதல், 19 ஆயிரத்து 397 கோடியிலிருந்து, 23 ஆயிரத்து 579 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, 15 லட்சத்து 72 ஆயிரத்து 27 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனம், இறக்குமதி செலவினம், மூலப்பொருட்கள் விலை உயர்வு, போன்றவற்றால், வாகனங்களின் விலையை, 500 முதல் 1,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. நேற்று முன்தினம், முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|