பதிவு செய்த நாள்
05 மே2012
01:33
பல்லடம்:கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் சங்கத்துக்கும், பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) நிர்வாகிகளுக்கும் இடையே கூலி உயர்வு தொடர்பாக நடந்த பேச்” வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, கிலோவுக்கு 50 காசுகள் உயர்த்தி தர முடிவு செய்யப்பட்டது.பல்லடம், பொங்கலூர், உடுமலை, சுல்தான்பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன.
இங்குள்ள கோழிகளுக்கு தீவனம் வழங்கி, கிலோவுக்கு மூன்று ரூபாய் உற்பத்தி கூலியாக கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வந்தன.விலைவாசி உயர்வால், கறிக்கோழி வளர்ப்பு கூலியை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும் என பண்ணையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கத்துக்கும், பி.சி.சி., நிர்வாகிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, கறிக்கோழி வளர்ப்பு கூலி, கிலோ மூன்று ரூபாயில் இருந்து, மூன்று ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|