பதிவு செய்த நாள்
07 மே2012
02:13
கொச்சி:முந்திரி அதிகம் விளையும் ஆப்ரிக்காவில், உற்பத்தி திக்கப்பட்டுள்ளதால், முந்திரி விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.சர்வதேச முந்திரி உற்பத்தியில் ஆப்ரிக்கா, 45 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் முந்திரியில், பெரும்பங்கை பதப்படுத்தி தருவதில் இந்தியா, வியட்னாம் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.இந்நிலையில், ஆப்ரிக்காவின் கினியா பிசா நாட்டின் முந்திரி உற்பத்தி, அரசியல் பிரச்னை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐவரிகோஸ்ட் நாட்டின் முந்திரி உற்பத்தியும் குறைந்துள்ளது. அதனால், முந்திரி வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.சர்வதேச சந்தையில், சென்ற ஏப்ரல் மாதம், முந்திரி விலை 10-12 சதவீதம் உயர்ந்தது. முந்திரிக்கொட்டை விலை 12-15 சதவீதம் அதிகரித்தது. இந்தியாவில், ஒரு கிலோ முந்திரி, சில்லரை விற்பனையில், தரத்திற்கேற்ப 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
உள்நாட்டில், கடந்த சில மாதங்களாக, முந்திரிக் கொட்டை விலை சரிவடைந்துள்ளது. மேலும்,முந்திரி உற்பத்தி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதன் விலை உயர சாத்தியமில்லை என முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலகில், முந்திரி பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1.70 லட்சம் முதல் 1.90 லட்சம் டன் வரை முந்திரி பயன்படுத்தப்படுகிறது.
முந்திரிக் கொட்டையில் இருந்து முந்திரியைப் பிரித்து, பதப்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியா 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரியை ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|