பதிவு செய்த நாள்
07 மே2012
02:26
மங்களூர்:நாட்டில், ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தர பிர தேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில், மாம்பழ உற்பத்தி செய்யப்படுகிறது.மகாராஷ்டிராவில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன என்றாலும், மாம்பழம் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆந்திராவில், இதன் உற்பத்தி நிலையான அளவில் உள்ளது. அதேசமயம், உத்தர பிரதேசத்தில், மா சாகுபடி மற்றும் மாம்பழம் உற்பத்தி சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.
மேற்கு ஆசிய நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், வங்கதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள், இந்திய மாம்பழங்களுக்கு முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன.கடந்த 1991-92ம் ஆண்டில், இந்தியாவில், 28.70 லட்சம் ஹெக்டேர் பரப்பில், 2.86 கோடி டன் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில், 10.07 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான மாமரங்கள் மூலம், 87.10 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
இது, அவ்வாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பழங்கள் உற்பத்தியில் 30.4 சதவீதமாகும்.சென்ற 2010-11ம் ஆண்டில், 22.9 லட்சம் ஹெக்டேரில் 1.51 கோடி டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, நாட்டின் மொத்த பழங்கள் உற்பத்தியில், 20.3 சதவீதமாகும். இ@த நிதியாண்டில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் மாம்பழம் ஏற்றுமதி, 59 ஆயிரத்து 221 டன் மற்றும் 163 கோடி ரூபாய் என்றளவில் குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 74 ஆயிரத்து 461 டன் மற்றும் 200 கோடி ரூபாய் என்றளவில் உயர்ந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|