பதிவு செய்த நாள்
09 மே2012
23:59
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, சென்ற 2011-12ம் நிதியாண்டிற்கு பெற்ற 38.82 கோடி ரூபாய் ஊதியத்தில், 23.82 கோடி ரூபாயை நிறுவனத்திற்கே திரும்ப அளித்துள்ளார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக அவர், 15 கோடி ரூபாயை மட்டுமே ஊதியமாகப் பெற்று வருகிறார்.கடந்த 2007-08ம் நிதியாண்டில், முகேஷ் அம்பானி 44 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றார். இதனால், இந்திய நிறுவன தலைவர்களில் மிக அதிக ஊதியம் பெற்றவர் என்ற சிறப்பு இவருக்கு கிடைத்தது. இந்நிலையில், நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் ஊதியத்திற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று குரலெழுந்தது. இதை அடுத்து, முகேஷ் அம்பானி, தமது ஊதியமாக 15 கோடி ரூபாயை 2008-09ம் நிதியாண்டிற்கு பெற்றுக் கொண்டார். படிகள் உள்ளிட்ட இதர வருவாயை அவர் நிறுவனத்திற்கே அளித்தார்.2010-11ம் நிதியாண்டில் இவருக்கு 38.75 கோடி ரூபாய் ஊதியம் வழங்க, பங்குதாரர்கள் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. எனினும், அவர் 15 கோடி ரூபாய் மட்டுமே ஊதியமாக பெற்றுக் கொண்டார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|