வர்த்தக பற்றாக்குறை ஓராண்டில்இல்லாத அளவிற்கு குறைந்ததுவர்த்தக பற்றாக்குறை ஓராண்டில்இல்லாத அளவிற்கு குறைந்தது ... பருவ மாற்றத்தால் தேயிலை உற்பத்தி சரிவு பருவ மாற்றத்தால் தேயிலை உற்பத்தி சரிவு ...
அன்னிய நேரடி முதலீடு ரூ.40,500 கோடி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2012
00:15

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 810 கோடி டாலராக (40 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
வளர்ச்சி:இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, எட்டு மடங்கு (107 கோடி டாலர் - 5,350 கோடி ரூபாய்) அதிகம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.வோடபோன் நிறுவனத்திற்கும், வருமான வரி துறைக்கும் இடையே 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி விவகாரம், உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையிலும், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 3,650 கோடி டாலராக (1 லட்சத்து 82 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில் மருந்து, தொலைத் தொடர்பு, கட்டுமானம், மின்சாரம் மற்றும் உலோகம் போன்ற துறைகளில், அதிகளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் அன்னிய நேரடி முதலீட்டில், மொரீஷியஸ், குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம், 720 கோடி டாலர் அன்னிய முதலீடு இந்தியாவிற்கு வர, வழி வகுத்துள்ளது.ஜூன் மாதம்சென்ற மார்ச் மாத உச்சத்திற்கு முன்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தான், அன்னிய முதலீடு அதிகளவில் இருந்தது. அதாவது, இம்மாதத்தில், 565 கோடி டாலர் (28 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) மதிப்பிற்கு அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டது.கடந்த நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு, 1,942 கோடி டாலராக (97 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) குறைந்திருந்தது. இது, 2009-10ம் நிதியாண்டில், மிகவும் அதிகபட்சமாக, 2,583 கோடி டாலராக (1 லட்சத்து 29 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) என்றளவில் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)