பதிவு செய்த நாள்
11 மே2012
00:15
புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 810 கோடி டாலராக (40 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
வளர்ச்சி:இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, எட்டு மடங்கு (107 கோடி டாலர் - 5,350 கோடி ரூபாய்) அதிகம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.வோடபோன் நிறுவனத்திற்கும், வருமான வரி துறைக்கும் இடையே 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி விவகாரம், உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையிலும், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 3,650 கோடி டாலராக (1 லட்சத்து 82 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில் மருந்து, தொலைத் தொடர்பு, கட்டுமானம், மின்சாரம் மற்றும் உலோகம் போன்ற துறைகளில், அதிகளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் அன்னிய நேரடி முதலீட்டில், மொரீஷியஸ், குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம், 720 கோடி டாலர் அன்னிய முதலீடு இந்தியாவிற்கு வர, வழி வகுத்துள்ளது.ஜூன் மாதம்சென்ற மார்ச் மாத உச்சத்திற்கு முன்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தான், அன்னிய முதலீடு அதிகளவில் இருந்தது. அதாவது, இம்மாதத்தில், 565 கோடி டாலர் (28 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) மதிப்பிற்கு அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டது.கடந்த நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு, 1,942 கோடி டாலராக (97 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) குறைந்திருந்தது. இது, 2009-10ம் நிதியாண்டில், மிகவும் அதிகபட்சமாக, 2,583 கோடி டாலராக (1 லட்சத்து 29 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) என்றளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|