பதிவு செய்த நாள்
11 மே2012
12:24
பெங்களூரு : கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கனரா வங்கியன் நிகரலாபம் 23 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது. நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளில் கனரா வங்கியும் ஒன்று. இவ்வங்கி தனது நிதிநிலை அறிக்கையை நேற்று பெங்களூருவில் வெளியிட்டது. கனரா வங்கியின் தலைவர் எஸ்.ராமன் இதனை வெளியிட்டு பேசினார். அதில் மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த 2011-12ம் நிதியாண்டில் வங்கியின் நிகரலாபம் ரூ.3,283 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் சரிவாகும். அதேசமயம் வங்கியின் மொத்த வருவாய் 31 சதவீதம் உயர்ந்து ரூ.33,778 கோடியாக இருக்கிறது. மேலும் வங்கியின் உலகளாவிய வர்த்தகமும் ரூ.5,59,554 கோடியாக இருப்பதகாவும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 10.9 சதவீத வளர்ச்சி என்றும் கூறியிருக்கிறார்.
உலகப் பொருளாதார வீழ்ச்சி, தொழில் துறையின் மந்தநிலை உள்ளிட்ட சில காரணங்களால் வங்கியின் லாபம் எதிர்ப்பார்த்த அளவு இல்லாமல் போனது என்றும் நடப்பாண்டில் இவை சரிசெய்யப்படும் என்றும், நடப்பு நிதியாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகத்தை ரூ.6.50 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், நியூயார்க், டோக்கியா போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிறநகரங்களிலும் சேர்த்து புதிதாக 325 வங்கி கிளைகள் மற்றும் 1200 புதிய ஏ.டி.எம். மையங்கள் துவங்க இருப்பதாகவும் ராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|