பதிவு செய்த நாள்
13 மே2012
00:57
சென்னை:இத்தாலி நாட்டைச் சேர்ந்த பானிபோனியோலி குழுமத்தின் பானிபோனியோலிடிரான்ஸ்மிஷன் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அதன் தொழிற்சாலையில், கூடுதலாக, 40 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, இதன் இயக்குனர் எம்.கணேஷ் தெரிவித்தார்.
தொழில் துறை மற்றும் காற்றாலைகளுக்கு தேவையான 'கியர் பாக்ஸ்'களை தயாரித்து வரும் இந்நிறுவனம், ஏற்கனவே, விரிவாக்கத் திட்டத்திற்காக, 60 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.இந்நிறுவனத்திற்கு சொந்தமாக, சென்னைக்கு அருகே மற்றொரு தொழிற்சாலையும் உள்ளது.பானிபோனியோலி நிறுவனம், கட்டுமான நடவடிக்கைகள், மெஷின் டூல், தண்ணீர் சுத்திகரிப்பு, சுரங்கம், உருக்காலைகள் போன்ற துறைகளுக்கான கியர் பாக்ஸ் தயாரிப்பிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
இதற்காகவே, புதிய முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.மேலும், நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், நிறுவனம், 530 கோடி ரூபாயை விற்றுமுதலாக பெற்றுள்ளது. இதில், ஏற்றுமதி மூலம், 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என, கணேஷ் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|