பதிவு செய்த நாள்
17 மே2012
23:56
புதுடில்லி: நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), தயாரிப்புத் துறையில், 30-40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய தொழிலாளர் அமைச்சகம், அண்மையில் சமர்ப்பித்த அதன், 13வது காலாண்டு (அக்டோபர்-டிசம்பர், 2011) ஆய்வறிக்கையில், நாட்டில் பல துறைகளில், குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீ.பி.ஒ., துறைகளில், அதிகளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் முதல், 2011ம் ஆண்டி டிசம்பர் வரையிலான காலத்தில், மேற்கண்ட இரண்டு துறைகளில், கூடுதலாக 19.80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், உற்பத்தி துறையில், கூடுதலாக 30-40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|