ரானே இன்ஜின் வால்வ் விற்பனை ரூ. 307 கோடிரானே இன்ஜின் வால்வ் விற்பனை ரூ. 307 கோடி ... மலிவு விலை இறக்குமதியால் உள்நாட்டு பாக்கு தொழில் பாதிப்பு மலிவு விலை இறக்குமதியால் உள்நாட்டு பாக்கு தொழில் பாதிப்பு ...
வரத்து அதிகரித்துள்ள போதிலும் ஏலக்காய் விலை தொடர்ந்து உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2012
00:16

கொச்சி:தமிழகம் மற்றும் கேரள ஏல மையங்களில், ஏலக்காய் வரத்து அதிகரித்துள்ள போதிலும், அதன் விலை குறையாமல் உயர்ந்தே காணப்படுகிறது.
கடந்த வாரம் ஏல மையங்களுக்கு கொண்டு வரப்பட்ட, 472 டன் ஏலக்காயில், 455 டன் விற்பனை செய்யப்பட்டது. அந்த வாரம் முழுவதும், ஒரு கிலோ ஏலக்காய் 800 ரூபாய் முதல் 890 ரூபாய் வரை விலைபோனது. உயர்தர ஏலக்காய், கிலோ 1,129 ரூபாய் முதல் 1,381 ரூபாய் என்ற அளவில் அதிகரித்து ஏலம் போனது.
ஏலக்காய் வரத்து:பருவ நிலை மாற்றத்தால், வரும் மாதங்களில், புதிய ஏலக்காய் வரத்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள், தரமான ஏலக்காய் வகைகளை வாங்கி வருகின்றனர்.அடுத்து, வரும் ஆகஸ்ட் இறுதியில்தான் புதிய ஏலக்காய் வரத்து இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏலக்காய் வகைகளை, ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் வாங்குவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்,ஏலக்காய் விலை உயர்வு காரணமாக, ஏற்றுமதியாளர்கள் ஏலக்காய் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். அவர்கள், ஜூன் மாதம் மத்தியில் இருந்து ஏலக்காய் வாங்குவதில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.ஏல மையம்:கொச்சி ஏல மையத்தில், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடப்பு மே மாதம் 20ம் தேதி வரை 17 ஆயிரத்து 805 டன் ஏலக்காய் வந்துள்ளது. இதில், 16 ஆயிரத்து 186 டன் விற்பனையாகியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில், ஏலக்காய் வரத்து 9,975 டன்னாகவும், விற்பனை 9,721 டன்னாகவும் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)