பதிவு செய்த நாள்
23 மே2012
00:16
கொச்சி:தமிழகம் மற்றும் கேரள ஏல மையங்களில், ஏலக்காய் வரத்து அதிகரித்துள்ள போதிலும், அதன் விலை குறையாமல் உயர்ந்தே காணப்படுகிறது.
கடந்த வாரம் ஏல மையங்களுக்கு கொண்டு வரப்பட்ட, 472 டன் ஏலக்காயில், 455 டன் விற்பனை செய்யப்பட்டது. அந்த வாரம் முழுவதும், ஒரு கிலோ ஏலக்காய் 800 ரூபாய் முதல் 890 ரூபாய் வரை விலைபோனது. உயர்தர ஏலக்காய், கிலோ 1,129 ரூபாய் முதல் 1,381 ரூபாய் என்ற அளவில் அதிகரித்து ஏலம் போனது.
ஏலக்காய் வரத்து:பருவ நிலை மாற்றத்தால், வரும் மாதங்களில், புதிய ஏலக்காய் வரத்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள், தரமான ஏலக்காய் வகைகளை வாங்கி வருகின்றனர்.அடுத்து, வரும் ஆகஸ்ட் இறுதியில்தான் புதிய ஏலக்காய் வரத்து இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏலக்காய் வகைகளை, ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் வாங்குவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்,ஏலக்காய் விலை உயர்வு காரணமாக, ஏற்றுமதியாளர்கள் ஏலக்காய் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். அவர்கள், ஜூன் மாதம் மத்தியில் இருந்து ஏலக்காய் வாங்குவதில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.ஏல மையம்:கொச்சி ஏல மையத்தில், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடப்பு மே மாதம் 20ம் தேதி வரை 17 ஆயிரத்து 805 டன் ஏலக்காய் வந்துள்ளது. இதில், 16 ஆயிரத்து 186 டன் விற்பனையாகியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில், ஏலக்காய் வரத்து 9,975 டன்னாகவும், விற்பனை 9,721 டன்னாகவும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|