பதிவு செய்த நாள்
23 மே2012
00:20
கொச்சி:குறைந்த விலையில் கொட்டை பாக்கு இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் இத்தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, ஒரு கிலோ கொட்டைப் பாக்கின் குறைந்தபட்ச இறக்குமதி விலையை, 35 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.
இந்தோனேஷியா:ஆனால், சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தோனேஷியாவில் இருந்து ஒரு கிலோ கொட்டைப்பாக்கு, சராசரியாக 22.34 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், இதே காலத்தில் மங்களூர் மற்றும் கொச்சியில் ஒரு கிலோ பாக்கு, முறையே 77.77 ரூபாய் மற்றும் 68.46 ரூபாய்க்கு விற்பனையானது.
அதாவது, இறக்குமதி விலையை விட, 40 - 55 ரூபாய் கூடுதலாக பாக்கு விற்பனையாகியுள்ளது.உள்நாட்டில் போதிய அளவிற்கு பாக்கு உற்பத்தி உள்ளது. என@வ பாக்குகளை இறக்குமதி செய்யவேண்டிய அவசியமில்லை என, விவŒõயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இறக்குமதி:இந்தியா, கடந்த 2008-09ம் நிதியாண்டு, 110 கோடி ரூபாய் மதிப்பிலான 44 ஆயிரத்து 776 டன் பாக்கு வகைகளை இறக்குமதி செய்துள்ளது. இது, 2009-10ம் நிதியாண்டில் 41 ஆயிரத்து 806 டன் (102 கோடியே 41 லட்சம் ரூபாய்) என்ற அளவிற்கு இருந்தது.
கடந்த 2010-11ம் நிதியாண்டில், உள்நாட்டில் 5 லட்சத்து 14 ஆயிரம் டன் கொட்டை பாக்கு உற்பத்தி செய்யப்பட்டது. இவற்றின் சராசரி விலை 34 ரூபாய் ஆகும்.
இதே நிதியாண்டில், வங்கதேசத்தில் இருந்து 33 ஆயிரத்து 238 டன் (116 கோடியே 53 லட்ச ரூபாய்) கொட்டை பாக்கு இறக்குமதியானது. இதன் சராசரி விலை ஒரு கிலோ 35 ரூபாயாக இருந்தது.
அதே சமயம், இதே காலத்தில், இந்தோனேஷியாவில் இருந்து, 52 கோடி ரூபாய் மதிப்பிற்கு 23 ஆயிரத்து 293 டன் கொட்டைப் பாக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதன் சராசரி விலை, கிலோவிற்கு 22.34 ரூபாயாக இருந்தது.தாய்லாந்தில் இருந்து 1,226 டன் (3 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய்) கொட்டைப் பாக்கு, சராசரியாக கிலோ 25.48 ரூபாய் என்ற விலையில் இறக்குமதி செய்து கொள்ளப்பட்டது.
ஆக, கடந்த 2010-11ம் நிதியாண்டில், பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 259 கோடி ரூபாய் மதிப்பிலான, 76 ஆயிரத்து 41 டன் (259 கோடி ரூபாய்) கொட்டை பாக்கு, இறக்குமதியானது. இதன் சராசரி விலை, கிலோ 34 ரூபாயாகும்.உள்நாட்டு உற்பத்தி:இதே நிதியாண்டில், உள்நாட்டில் கொட்டை பாக்கு உற்பத்தி, 5 லட்சத்து 14 ஆயிரம் டன்னாக இருந்தது. இதன் சராசரி விலை, மங்களுர் சந்தையில் 77.77 ரூபாயாகவும், கோழிக்கோட்டில் 68.46 ரூபாயாகவும் இருந்தது.உள்நாட்டில் பாக்கு உற்பத்தி நன்கு உள்ள நிலையில், மலிவு விலையில் இதனை இறக்குமதிöŒ#வதால் அது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|