பதிவு செய்த நாள்
23 மே2012
00:21
புதுடில்லி:நடப்பு சந்தை பருவத்தின் (அக்டோபர்-செப்டம்பர்), முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி, 13.51 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தின், இதே காலத்தில், 28.14 லட்சம் டன்னாக இருந்தது என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.உலகில், சர்க்கரை உற்பத்தியில், முதல் இடத்தில், பிரேசிலும், இரண்டாவது இடத்தில், இந்தியாவும் உள்ளன. சர்வதேச அளவில், சர்க்கரை பயன்பாட்டிலும், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய பருவத்தில், 2.43 கோடி டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.உள்நாட்டில், சர்க்கரை தேவைப்பாடு, 2.20 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேவையை விட, உற்பத்தி அதிகரித்துள்ளதால், மத்திய அரசு, இரண்டு கட்டங்களாக, 20 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது.இந்நிலையில், அரசு, சென்ற 2ம் தேதி, சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது. இதையடுத்து, வரும் மாதங்களில், இதன் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|