சிமென்ட் ஆலைகளின் விரிவாக்க நடவடிக்கையில் சிக்கல்:வரம்பு தொகையை அரசு விரைவில் வழங்குமா?சிமென்ட் ஆலைகளின் விரிவாக்க நடவடிக்கையில் சிக்கல்:வரம்பு தொகையை அரசு ... ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
கிளைகளை மூடி, ஆட்குறைப்பு செய்ததால்...லாப பாதைக்கு திரும்பிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2012
00:29

கடந்த இரண்டு ஆண்டுகளில், எஸ்.பீ.ஐ. நீங்கலாக, ஆயுள் காப்பீட்டு துறையில் முன்னணியில் உள்ள, ஆறு தனியார் நிறுவனங்கள் அதிரடியாக மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளால் லாபப் பாதைக்கு திரும்பியுள்ளன.
கட்டுப்பாடுகள்:கடந்த 2010ம் ஆண்டு, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா), காப்பீட்டு துறையில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியது.இதன் தாக்கத்தால், காப்பீட்டு நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து, இந்நிறுவனங்கள் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கையால், கடந்த இரண்டாண்டுகளில் அவற்றின் லாபம் அதிகரித்துள்ளது. மேலும், இழப்பை சந்தித்து வந்த சில நிறுவனங்களும் லாப பாதைக்கு திரும்பியுள்ளன.
இந்த வகையில், ஆயுள் காப்பீட்டு துறையில் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் சிறப்பான அளவில் லாபமீட்டியுள்ளன. இவை, கிளைகளின் எண்ணிக்கையை 30 சதவீதமும், பணியாளர்களின் எண்ணிக்கையை 27 சதவீதமும் குறைத்துள்ளன. இதன் பயனாக, இந்நிறுவனங்களின் லாபம், கடந்த இரண்டு ஆண்டுகளில், இரு மடங்கு உயர்ந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ.புருடென்ஷியல்:இந்தியாவில் தனியார் காப்பீட்டு துறையில், இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் விளங்குகிறது. கடந்த 2009-10ம் நிதியாண்டில், 1,923 கிளைகள் மற்றும் 20 ஆயிரம் பணியாளர்களுடன் செயல்பட்ட இந்நிறுவனம், 260 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது. சிக்கன நடவடிக்கையின் பயனாக, இந்நிறுவனத்தின் கிளைகள் மற்றும் பணியாளர் எண்ணிக்கை, முறையே 1,000 மற்றும் 13 ஆயிரத்து 200 ஆக குறைந்தது. இதனால் இந்நிறுவனத்தின் லாபம், சென்ற 2011-12ம் நிதியாண்டில் 1,384 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த 2009-10ம் நிதியாண்டில், 1,151 கிளைகள் மற்றும் 20 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டிருந்த பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 540 கோடி ரூபாயாக இருந்தது.இந்நிறுவனம் அதன் கிளைகளை 1,044 ஆகவும், பணியாளர் எண்ணிக்கையை, 13 ஆயிரத்து 829 ஆகவும் குறைத்தது. இதனால் இந்நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற நிதியாண்டில், 1,311 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேக்ஸ் நியூயார்க்:மேக்ஸ் நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், 705 கிளைகள் மற்றும் 10 ஆயிரத்து 454 பணியாளர்களை கொண்டிருந்தது. கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்நிறுவனம் 20 கோடி ரூபாய் இழப்பை கண்டிருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்நிறுவனம் அதன் கிளைகளின் எண்ணிக்கையை, 464 ஆகவும், பணியாளர் எண்ணிக்கையை, 7,583 ஆகவும் குறைத்தது. இதனால், சென்ற 2011-12ம் நிதியாண்டின், டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாதத்தில், இந்நிறுவனம் 572 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இதே காலத்தில், டாட்டா ஏ.ஐ.ஜி., லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளைகளின் எண்ணிக்கை, 433லிருந்து 294 ஆகவும், பணியாளர் எண்ணிக்கை 8,100 லிருந்து 4,744 ஆகவும் குறைக்கப்பட்டது.
இதனால், கடந்த 2009-10ம் நிதியாண்டில் 400 கோடி ரூபாய் இழப்பை கண்டிருந்த இந்நிறுவனம், சென்ற நிதியாண்டின், டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், 107 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.எச்.டீ.எப்.சி. லைப் இன்சூரன்ஸ்:எச்.டீ.எப்.சி., லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் கிளைகள் மற்றும் பணியாளர் எண்ணிக்கையை 474(568) மற்றும் 14 ஆயிரத்து 310 (14 ஆயிரத்து 397) ஆக குறைத்தது. இதனால், கடந்த 2009-10ம் நிதியாண்டில், 280 கோடி ரூபாய் இழப்பை கண்ட இந்நிறுவனம், சென்ற நிதியாண்டில், 271 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது.
இதே காலத்தில், பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் கிளைகளை, 652லிருந்து 634 ஆக குறைத்தது. இதன் பணியாளர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 279 ஆக உள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக, இந்நிறுவனம் 435 கோடி ரூபாய் இழப்பில் இருந்து மீண்டு, 461 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.சென்ற நிதியாண்டில் ஆயுள் காப்பீட்டு துறையின், புதிய பாலிசி விற்பனை 8 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையிலும், முன்னணி நிறுவனங்களின் நிகர லாபம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)