பதிவு செய்த நாள்
23 மே2012
10:40
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.18 புள்ளிகள் குறைந்து 15942.23 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 23.10 புள்ளிகள் குறைந்து 4837.40 புள்ளிகளோடு காணப் பட்டது.பங்கு வர்த்தகம், செவ்வாய் க்கிழமை மிகவும் மோசமாக இருந்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, உலோகம், பொதுத் துறை நிறுவனங்கள், மின்சாரம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது.வரலாற்றில் முதன் முறையாக டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி கணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரு.55.82 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|