பதிவு செய்த நாள்
26 மே2012
01:23
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.ஈ.சி.,), மின் துறை நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், பல்வேறு கடன் சார்ந்த ஆவண வெளியீடுகள் மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சர்மா கூறியதாவது:வெளிநாட்டு வர்த்தக கடன் (4,200 கோடி ரூபாய்), அன்னியச் செலவாணியில் பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்கள் (5,000 கோடி ரூபாய்) உள்ளிட்டவை வாயிலாக, நடப்பு நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகு, இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வெளியீடுகளை அடுத்து, நிறுவனத்தில், மத்திய அரசு, கொண்டுள்ள பங்கு மூலதனம் 66.8 சதவீதத்திலிருந்து, 56 சதவீதமாக குறையும். மேற்கண்ட வெளியீடுகள் வாயிலாக திரட்டப்படும் தொகை, மாநில மின்சார வாரியம் மற்றும் மின் உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்படும். இவ்வாறு ராஜீவ் சர்மா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|