பதிவு செய்த நாள்
27 மே2012
00:01
புதுடில்லி:நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நாட்டின், ஒட்டுமொத்த, "ஏ4 பிரிண்டர்' விற்பனை, 5 லட்சத்து 53 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 0.4 சதவீதம் (5 லட்சத்து 50 ஆயிரம் பிரிண்டர்கள்) அதிகம் என,"சைபர் மீடியா ரிசர்ச்' ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தேவையான, "ஹார்டுவேர்' எனப்படும், வன்பொருட்கள் தயாரித்து வழங்குவதில், தாய்லாந்து முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், இந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால், பிரிண்டர்களுக்கு பயன்படுத்தப்படும், "ஹார்டு டிஸ்க்' பற்றாக்குறை ஏற்பட்டது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால், வரும் மாதங்களில், பிரிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில், பன்முக பயன்பாடு கொண்ட, பிரிண்டர்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.நடப்பாண்டின் முதல் காலாண்டில், லேசர் பிரிண்டர் விற்பனை, முந்தைய காலாண்டை விட, 4 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்க்ஜெட் பிரிண்டர் விற்பனை, 5 சதவீதம் குறைந்து, 2 லட்சத்து 40 ஆயிரத்திலிருந்து, 2 லட்சத்து 30 ஆயிரமாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|