பதிவு செய்த நாள்
28 மே2012
00:36
மினி ரத்னா அந்தஸ்து பெற்ற, நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்.எச். பி.சி.), மின் உற்பத்தி, பகிர்மானம், வினியோகம் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், 2,772 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட, 28 சதவீதம் (2,167 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் விற்றுமுதல், 4,046 கோடியிலிருந்து, 5,510 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்நிறுவனம், ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில், மின் உற்பத்தி திட்டங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன், 1,200 மெகா வாட் என்ற அளவில் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|