பதிவு செய்த நாள்
30 மே2012
00:58
புதுடில்லி:இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதால், ஏராளமானோர், அயல்நாட்டு சுற்றுலா பயணத்தை ரத்து செய்து விட்டு, உள்ளுர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு துவக்கத்தில், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 45 - 46 ரூபாயாக இருந்தது. இது, தற்போது 55 -56 ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால், ஒருவர் ஒரு அமெரிக்க டாலர் வாங்க, கூடுதலாக 10 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.
இதனால், கடந்த ஒரு மாதத்தில் ஏராளமானோர், தங்களின் வெளிநாட்டு பயணத்தை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா துறை சார்ந்த இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது .@மலும் இதனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான செலவினம், 25-30 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த தாய்லாந்து, மலேஷியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கான பயணச் செலவு 10-20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் பலர், உள்நாட்டு சுற்றுலா தலங்களான கேரளா, ராஜஸ்தான், கோவா போன்ற இடங்களுக்கு தங்கள் பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளதாக எக்ஸ்பீடியா இந்தியா நிறுவனத்தின் சந்தைபடுத்தல் பிரிவு தலைவர் மன்மீத் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த ஒரு மாதத்தில் உள்ளுர் பயணங்களுக்கான முன்பதிவு 20-25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை ரத்து செய்தவர்கள், அதே செலவில் உள்நாட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு குடில்களில் அறைகளை பதிவு செய்து அனுபவிக்கின்றனர் என, அலுவாலியா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|