தொலை தொடர்பு துறையில் ரூ.9 லட்சம் கோடி முதலீடுதொலை தொடர்பு துறையில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு ... அன்னிய முதலீட்டை ஈர்க்க கட்டுப்பாடுகளில் தளர்வு அன்னிய முதலீட்டை ஈர்க்க கட்டுப்பாடுகளில் தளர்வு ...
டாலர் மதிப்பு உயர்வால் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும் இந்தியர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2012
00:58

புதுடில்லி:இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதால், ஏராளமானோர், அயல்நாட்டு சுற்றுலா பயணத்தை ரத்து செய்து விட்டு, உள்ளுர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு துவக்கத்தில், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 45 - 46 ரூபாயாக இருந்தது. இது, தற்போது 55 -56 ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால், ஒருவர் ஒரு அமெரிக்க டாலர் வாங்க, கூடுதலாக 10 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.
இதனால், கடந்த ஒரு மாதத்தில் ஏராளமானோர், தங்களின் வெளிநாட்டு பயணத்தை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா துறை சார்ந்த இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது .@மலும் இதனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான செலவினம், 25-30 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த தாய்லாந்து, மலேஷியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கான பயணச் செலவு 10-20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் பலர், உள்நாட்டு சுற்றுலா தலங்களான கேரளா, ராஜஸ்தான், கோவா போன்ற இடங்களுக்கு தங்கள் பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளதாக எக்ஸ்பீடியா இந்தியா நிறுவனத்தின் சந்தைபடுத்தல் பிரிவு தலைவர் மன்மீத் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த ஒரு மாதத்தில் உள்ளுர் பயணங்களுக்கான முன்பதிவு 20-25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை ரத்து செய்தவர்கள், அதே செலவில் உள்நாட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு குடில்களில் அறைகளை பதிவு செய்து அனுபவிக்கின்றனர் என, அலுவாலியா மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)