பதிவு செய்த நாள்
30 மே2012
17:00
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 126.43 புள்ளிகள் குறைந்து 16312.12 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 39.35 புள்ளிகள் குறைந்து 4950.75 புள்ளிகளோடு காணப் பட்டது. டாடா மோட்டர்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டிஎல்எஃப் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன. இன்றைய வர்த்தகம் சரிவிற்கு காரணம் ரூபாயின் மதிப்பு குறைந்ததே ஆகும். இன்றை வர்த்தக நேர முடிவன் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.56.21ஆக இருந்தது. கடந்த மே 24ம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு ரூ.56.38 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|