பதிவு செய்த நாள்
02 ஜூன்2012
01:02
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை, 2 சதவீதம் குறைத்துள்ளன. இது, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
உள்நாட்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பீ.பி.சி.எல்.) ஆகிய நிறுவனங்கள், விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு எரிபொருளை அளித்து வருகின்றன. இந்நிறுவனங்கள், சர்வதேச கச்Œõ எண்ணெ# விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதம் இருமுறை, இதன் விலையை மாற்றி அமைக்கின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விமான எரிபொருள் விலை, கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டர்), 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டில்லியில், கிலோ லிட்டர் விலை, 1,377 ரூபாய் குறைந்து,
65 ஆயிரத்து 670 ரூபாய் என்றளவில் உள்ளது.மும்பையில், இதன் விலை, 68 ஆயிரத்து 22 ரூபாயிலிருந்து, 66 ஆயிரத்து 588 ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு முன், எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை, சென்ற மார்ச் 1ம் தேதி, 3.2 சதவீதமும், ஏப்ரல் 1ம் தேதி, 2.8 சதவீதமும் உயர்த்தின. குறிப்பாக, மார்ச் 16ம் தேதி, இதன் விலை, கிலோ லிட்டருக்கு, 1,299 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு முன், விமான எரிபொருள் விலை, கிலோ லிட்டருக்கு, 62 ஆயிரத்து 557 ரூபாய் என்றளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|